Monday, 20th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சென்னை: டெல்லி புறப்பட தயாராக இருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளன், வீட்டில் மழைநீர் சூழ்ந்ததால், அணிந்திருந்த ஷூ நீரில் நனையாமல் இருக்க தொண்டர்கள் உதவியுடன் பார்வையாளர் அமரும் சேரில் மாறி, மாறி வந்து காரில் ஏறிச்சென்ற வீடியோ வைரலாகி வருகிறது.
சென்னை வேளச்சேரி தமிழ்நாடு குடியிருப்பு காலனியில் முதலாவது அவென்யூவில் விடுதலை கட்சி தலைவர் திருமாவளவன்வீடு உள்ளது. கடந்த சில நாட்களால் பெய்து வரும் கனமழை காரணமாக அவரது வீட்டில் மழைநீர் புகுந்தது. இன்று (நவ.29) டில்லியில் நடந்து வரும் பார்லி., குளிர்கால கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக சென்னை விமானநிலையம் செல்ல தயாரானார்.
அப்போது அவரது, வீட்டில் சுமார் 2 அடி உயரத்திற்கு மழைநீர் தேங்கியிருந்தது. அதனால் தான் அணிந்திருந்த 'ஷூ' நீரில் நனையாமல் எப்படி காருக்கு செல்வது என யோசித்தார். உடனே பார்வையாளர்கள் அமர போடப்பட்டிருந்த இரும்பு சேர் மீது ஏற , அதனை தொண்டர்கள் லாவகமாக இழுத்துக்கொண்டு வந்தனர். ஒரு வழியாக காரில் ஏறி புறப்பட்டுச் சென்றார். இதன் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.